Tuesday 7th of May 2024 07:33:27 AM GMT

LANGUAGE - TAMIL
.
விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா!

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா!


தே.மு.தி.க பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்தின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து சென்னை - மனப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கணவரும் கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஏற்கனவே செப்டம்பர் 22 ஆம் திகதி கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவா் நந்தம்பாக்கத்தில் உள்ள மியோட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயகாந்த் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை உள்ளது என அவா் அனுமதிக்கப்பட்டுள்ள மியோட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிருத்வி மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது மனைவியும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுகுள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் திரு.விஜயகாந்த் அவர்களின் துணைவியாரும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்ச் செல்வம் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE